கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை - ஜெர்மனியுடன் இணைந்து பருவநிலை மாற்றம், பயிர் சேதம் குறித்து ஆராய்ச்சி

காலநிலைக்கு ஏற்றார்போல் பயிர் காப்பீடு செய்வது எப்படி? தண்ணீரை குறைத்து அதிக மகசூல் பெறுவது எப்படி? என்பது குறித்த ஆராய்ச்சிகள் ஜெர்மன் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படுவதாக பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தகவல்.



கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் ஜெர்மன் நாட்டுடன் இணைந்துமாறிவரும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் இழப்பீடு தொடர்பாக ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.



இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது, பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிகள், பேரிடர் காலங்களில் ஏற்படும் பயிர் சேதங்களை செயற்கைகோள் தொழில்நுட்பம் மூலமாகவும், தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை திரட்டுவதன் மூலம் விவசாயிகளுக்கு உரியநிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் நோக்கம் காலநிலை மாற்றம் காரணமாக பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்வது. பயிர் பாதுகாப்பு திட்டங்கள், தனிநபர் விவசாயத்திற்கும் செயல்படுத்த ஏதுவாக அமையும். மண், தண்ணீர், பயிர் நிலை குறித்த தகவல்களை செல்பேசி வாயிலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காலநிலைக்கு ஏற்றார்போல் பயிர் காப்பீடு செய்வது எப்படி என்பதை ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளோம். இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை கையாள்வது எப்படி மற்றும் அதற்கான வழிமுறைகளை தெரிவிப்பது போன்ற திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.

தண்ணீரை குறைத்து அதிக மகசூல் பெறும் வகையில் திட்டங்களை வகுக்கப்பட உள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உபகரணங்களை உற்பத்தி செய்து வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1000 விவசாயிகளுடன் தொடர்பில் இருந்து கொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...