அதிக சத்தத்துடன் கூடிய வெடிகளை வைத்து பாறைகளை உடைக்க கூடாது - கல்குவாரிகளுக்கு கிணத்துக்கடவு வட்டாட்சியர் எச்சரிக்கை

கிணத்துக்கடவு வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், விதிகளை மீறி செயல்பட கூடாது என்றும், அதிக சத்தத்துடன் கூடிய வெடிகளை வைத்து பாறைகளை உடைக்க கூடாது என கல்குவாரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட நெ.10 முத்தூர், குதிரையாலாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கல்குவாரிகளில் அதிக சத்தத்துடன் கூடிய வெடிகளை வைத்து பாறைகளை உடைப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுவது மட்டுமல்லாமல் விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் கனரக வாகனங்கள்இயக்கப்படுவதால் சாலைகள் சேதம் அடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் புகார் தெரிவித்து இருந்தனர்.

இதுதொடர்பாக கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்றிரவு வட்டாட்சியர் மல்லிகா தலைமையில் விவசாயிகள் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் இடையேயான ஆலோசனை கூட்டம்நடைபெற்றது

இதில் கலந்துகொண்ட விவசாயிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதில். அரசின்விதிகளை மீறி கல்குவாரிகள் செயல்படுகின்றன. அதிக சத்தம் கொண்ட வெடிகளை வைத்து பாறைகளை உடைக்கப்படுகின்றன.

இதன் காரணமாக வீடுகளில் சேதம் ஏற்படுவதோடு, விலை நிலங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும் கனரக வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பாறை கற்கள் கொண்டு செல்வதால் தார் சாலைகளும் சேதமடைந்து குண்டு குழியுமாக மாறியுள்ளதாக குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக கல்குவாரி உரிமையாளர்களிடம் பேசிய வட்டாட்சியர், அரசின் விதிகள் படி கல்குவாரியை இயக்க வேண்டும். அதிக சத்தத்துடன் கூடிய வெடிகள் வைக்க கூடாது. விளைநிலங்கள் பாதிக்காத வகையில் பாறைகளை உடைக்க வேண்டும் என்று கல்குவாரி உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...