கோவை மாநகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 3471 விளம்பர பதாகைகள் அகற்றம்- மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தகவல்

கோவை மாநகராட்சியில் கடந்த 2016 அக்டோபர் மாதம் முதல் 4.02.2017 வரை 5 மண்டலங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள 3471 விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது என கோவை மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியில் 2016 அக்டோபர் மாதம் முதல் 2017 பிப்ரவரி 4 ம் தேதி வரை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கிழக்கு மண்டலத்தில் 431 விளம்பர பதாகைகளும், மேற்கு மண்டலத்தில் 1496 விளம்பர பதாகைகளும், வடக்கு மண்டலத்தில் 528 விளம்பர பதாகைகளும், தெற்கு மண்டலத்தில் 28 விளம்பர பதாகைகளும் மற்றும் மத்திய மண்டலத்தில் 988 விளம்பர பதாகைகளும் ஆகமொத்தம் 3471 விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது.

அதாவது 2016 அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள 5 மண்டலங்களில் மொத்த 1791 விளம்பரப் பதாகைகளும், ஜனவரி 2017-ல் 5 மண்டலங்களில் மொத்த 577 விளம்பரப் பதாகைகளும், 01.02.2017 முதல் 4.02.2017 வரை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள 5 மண்டலங்களில் 203 விளம்பர பதாகைகளும் என மொத்தம் இதுவரை 3471 விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...