மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வது குறித்து மாநகராட்சி ஆணையர் (பொ) தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தலைமையில் கோவை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களான 100 வார்டு பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக குடிநீர் விநியோகப் பொறியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோக லாரி உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் எல்லா பகுதிகளுக்கும் சமமாக 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு கூடுதலாக டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. 

குடிசைப் பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை பொருத்தி லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் கூடுதலாக லாரிகள் இயக்க வாய்ப்புள்ளது. 

குடிநீர் விநியோகம் சம்மந்தமாக பிப்ரவரி மாதத்திற்கான விநியோக செயல் திட்டம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. வீரகேரளம் அருகில் உள்ள வேடபட்டி குளத்தின் அருகில் ஆழ்குழாய் கிணறு அமைத்து நீர் பரிசோதனை செய்து குடிநீர் அற்ற பிற உபயோகங்களுக்கு பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆகவே, பொது மக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், நகரப் பொறியாளர் (பொ) நடராஜன், செயற்பொறியாளர்கள் ஞானவேல், பார்வதி, ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் கருப்புசாமி, பிரபாகரன், கலாவதி, குடிநீர் விநியோக உதவி மற்றும் இளம்பொறியாளர்கள், குடிநீர் விநியோக லாரி உரிமையாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...