அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் மீண்டும் தீ விபத்து; 2 ராணுவ வீரர்கள் படுகாயம்

இன்று காலை DSC செக்சனில் பைப் வெல்டிங் பணி நடந்து கொண்டிருந்த போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில், அங்கு பணியாற்றி வந்த ஹிமாஞ்சு, மனோஜ்குமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று மீண்டும் ஏற்பட்ட தீ விபத்தில், வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த 2 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.



அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கு தேவையான வெடி பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 19 ஆம் தேதி அதிகாலையில் தொழிற்சாலையில் உள்ள சிடி செக்சனில் பலத்த சப்தத்துடன் சிலிண்டர் வெடி விபத்து நடந்தது. அதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை DSC செக்சனில் பைப் வெல்டிங் பணி நடந்து கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில், அங்கு பணியாற்றி வந்த ஹிமாஞ்சு, மனோஜ்குமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.



காயமடைந்த இருவரும் வெடி மருந்து தொழிற்சாலை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவம் குறித்து வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...