கோவையில் லஞ்சம் வாங்கிய மின் வாரிய இளமின் பொறியாளர் உட்பட இருவர் கைது

மின் இணைப்பு பெற ரூபாய். 5000 லஞ்சம் பெற்ற மலுமிச்சம்பட்டி மின் வாரிய போர்மேன் சங்கர் கணேஷ் மற்றும் இளமின் பொறியாளர் சுப்பிரமணி ஆகியோரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.



கோவை: கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (28), இவர் மலுமிச்சம்பட்டி எம்.ஜி.பி நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக தற்காலிக மின் இணைப்பு பெற கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளார்.



மேலும், இதற்காக இணைதளத்திலேயே ரூ.2,828 கட்டணம் செலுத்தியுள்ளார். மின் இணைப்பு வழங்குவது குறித்து கார்த்திக் மலுமிச்சம்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் இருந்த இளமின் பொறியாளர் சுப்பிரமணியன் (50) என்பவரிடம் கேட்ட போது, மின் இணைப்பை வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.

அவ்வளவு பணம் இல்லை என கூறியதால், ரூ.5 ஆயிரம் கொடுத்தால் மின் இணைப்பு கொடுப்பதாக சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும், அந்த பகுதியில் மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் முடிந்து இணைப்பு கொடுக்கப்பட்டதாக இணையதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளனர்.

ஆனால் பணம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என கூறியதால், கார்த்திகேயன் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் கார்த்திகேயனிடம் இரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை வழக்கம் போல மலுமிச்சம்பட்டி மின் வாரிய அலுவலகத்திற்குச் சென்ற கார்த்திக், சுப்பிரமணியனுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, அலுவலகத்தில் பணியாற்றும் போர்மேன் சங்கர் கணேஷ் என்பவர் மூலம் அந்த பணத்தை வாங்கியுள்ளார்.



இதையடுத்து அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் சங்கர் கணேஷ் லஞ்சம் வாங்கிய போது, அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் எஸ்.பி. திவ்யா தலைமையிலான போலீஸார் மலுமிச்சம்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் வைத்து சங்கர் கணேஷ் மற்றும் இளமின் பொறியாளர் சுப்பிரமணி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மின் இணைப்பை வழங்க இவர்கள் லஞ்சம் கேட்டு வாங்கியது உறுதியானது. 



இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...