மக்கள் விரோதப்போக்கில் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு இந்தியா



தொடர்ந்து மக்கள் விரோதப் போக்கை கடைபிடித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா சார்பில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஆர்ப்பாட்டங்கள், பேரணி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தேசிய செயலாளர் சுப்ரமணி அறிவித்துள்ளார்.



இன்று காலை கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் அனைத்து பத்திரிகையாளர்களை சந்தித்த வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் சுப்ரமணி கூறியதாவது:-

மத்திய அரசு பல்வேறு புதிய திட்டங்களை இந்தியாவில் வகுத்து வருகின்றது. திட்டங்கள் தோல்வியடைவதை ஒப்புக்கொள்ளாத மத்திய அரசு அதற்கு மாற்றாக மீண்டுமொரு புதிய சட்டத்தை செயல்படுத்துகிறது.

அதற்கு தக்க உதாரணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையே. வெளி நாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு நாட்டுமக்கள் வங்கிக்கணக்குகளில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் வாக்குறுதியாக கூறினார். 

ஆனால் அதை செயல்படுத்த முடியாமல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார். இதனால் பல மக்கள் துன்புற்று வருகின்றனர். 

மத ரீதியான பிரச்சாரங்களை மத்திய அரசு மேற்கொள்கிறது. மாட்டுக்கறி உண்பவர்கள் தேசிய விரோதிகளாக வர்ணிக்கப்பட்டு வருகிறார்கள். 

அதோடு தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களிடமும் மதம் சார்ந்த சிந்தனைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும்.

மேலும், ரயில்வே துறையை தனியார் மயமாக்குதல், பாமர மக்களிடத்தில் கேஷ் லெஸ் பரிவர்த்தனையை திணிப்பது போன்ற பல்வேறு மக்கள் விரோத போக்கை மத்திய அரசு செய்து வருகிறது.

இதை கண்டித்து வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா சார்பில் வரும் ஏப்ரல் 1 முதல் 25ம் தேதி வரை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த முடிவு செய்துள்ளோம். 

25-ம் தேதி தில்லியில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேரை திரட்டி பேரணி நடத்த உள்ளோம். மேலும், மாநில அளவிலான பிரச்சனைகளை எங்கள் கட்சி கையில் எடுத்து போரடும்" இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...