அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து ஆசிரியர்கள், ஊழியர்கள் என சுமார் 1000-ம் பேர் தமிழகத்தில் செயல்படும் அரசு கலை கல்லூரிகளில் பணியமர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள 87 அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, கோவை அரசு கலை கல்லூரி ஆசிரியர்களும், தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்தோருமான 50க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து, தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் வீரமணி கூறியதாவது :-
கடந்த 2008-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து 319 பேர் சமூக நீதிக்கு எதிராக அரசு கல்லூரிகளில் பணியமர்த்தப்பட்டனர். தற்போது அதே நிலை நீடிக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலைக்கு சேர்ந்த பலர் லஞ்சம் கொடுத்ததன் மூலமாக பணியில் சேர்ந்தவர்கள். அங்கு நிர்வாக முறைகேடு ஏற்படும்போது பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரிகளில் பணியமர்த்துவதை விடுத்து, அரசு கல்லூரிகளில் பணியமர்த்துவது நியாயமற்ற செயல். இதனால், 10 வருடத்திற்க் மேல் அரசு பணிக்காக காத்திருக்கும் பலருக்கு பாதிப்பு ஏற்படும். இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும்.அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, கோவை அரசு கலை கல்லூரி ஆசிரியர்களும், தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்தோருமான 50க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து, தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் வீரமணி கூறியதாவது :-
கடந்த 2008-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து 319 பேர் சமூக நீதிக்கு எதிராக அரசு கல்லூரிகளில் பணியமர்த்தப்பட்டனர். தற்போது அதே நிலை நீடிக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலைக்கு சேர்ந்த பலர் லஞ்சம் கொடுத்ததன் மூலமாக பணியில் சேர்ந்தவர்கள். அங்கு நிர்வாக முறைகேடு ஏற்படும்போது பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரிகளில் பணியமர்த்துவதை விடுத்து, அரசு கல்லூரிகளில் பணியமர்த்துவது நியாயமற்ற செயல். இதனால், 10 வருடத்திற்க் மேல் அரசு பணிக்காக காத்திருக்கும் பலருக்கு பாதிப்பு ஏற்படும். இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும்.அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.