அனைத்து செயல்களையும் முழு ஈடுபாட்டோடு செய்ய வேண்டும் என கோவை ஈஷா யேகா மையத்தில் நடைபெற்ற ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் வர்த்தக தலைவர்களுக்கு சத்குரு ஜகி வாசுதேவ் அறிவுரைகளை வழங்கினார்.
கோவை: ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் ‘ஈஷா இன்சைட்’ என்ற பெயரில் வர்த்தக தலைவர்களுக்கான தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய சத்குரு ஜகி வாசுதேவ், “நம் பாரத கலாச்சாரத்தில் முக்தியை வாழ்வின் குறிக்கோளாக கொண்ட ஒருவர் ஆன்மீக தேடல் உடையவராக பார்க்கப்படுவதாக கூறினார்.
இந்த தன்மையானது தொழில் முனைவோராக விரும்புபவர்களுக்கு மிகவும் அவசியம் என்று கூறிய அவர், ஏனெனில் தொழில்முனைவோர் ஒரு வர்த்தகம் செய்யும் நபர் மட்டுமல்ல என்றும் எப்போதும் தீர்வுகளையும், சாத்தியங்களையும் தேடி கொண்டு இருப்பவர் என தெரிவித்தார். இத்தகைய தேடல் இல்லாவிட்டால் ஒருவர் தொழில் முனைவோராக இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தம்பி கோஷி பேசியதாவது:
இன்றைக்கு நாம் அறிந்த ஆன்லைன் வணிகம் என்பது இன்னும் சில காலங்களில் பொருத்தமற்றதாக மாறும் என கூறினார். எனவே ஒவ்வொரு வகை விற்பனையாளரும் தங்கள் தயாரிப்புகளை ஒரு பொதுவான நெறிமுறையைப் பயன்படுத்தி திறந்த நெட்வொர்க்கில் விற்பனை செய்ய முயல வேண்டும் என தெரிவித்தார்.
அவரைத்தொடர்ந்து பேசிய HLE கிளாஸ்கோட் லிமிடெடட் நிறுவனத்தின் இயக்குநர் அமித் கல்ரா, ஒரு நிறுவனத்தின் மூன்று தூண்கள் - மக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என கூறினார். நிறுவனம் மூடப்பட்டால், அது மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
வரும் 27-ம் தேதி வரை நடைபெறும் இந்த ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வர்த்தக தலைவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர். குறிப்பாக, மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோரும் ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் 11 ஆண்டுகளாக நடத்தப்படும் ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் பிரபல தொழிலதிபர்களான ரத்தன் டாடா, என்.ஆர். நாராயண மூர்த்தி, உள்ளிட்ட பலர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.