மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெறக்கோரி கோவையில் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு உண்ணாவிரதம்

மின் கட்டண உயர்வால் மூலப்பொருட்கள், உதிரிபாகங்கள், வெட் கிரைண்டர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் என கோவையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: மின் கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா சார்பில் கோவை சிவானந்தா காலனி மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள டாடாபாத் பகுதியில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் 20 தொழில் அமைப்புகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் பங்கேற்றனர். உண்ணாவிரத போராட்டம் காரணமாக சிறு, குறு தொழில் கூடங்கள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.



சிறு, குறு தொழில் கூடங்கள் பயன்படுத்தும் தாழ்வழுத்த மின்சாரத்திற்கு பீக்ஹவர் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், சிறு, குறு தொழில் கூடங்களுக்கு நிலைகட்டணம் உயர்த்தப்பட்டதை ரத்து செய்யவேண்டும் என்ற இரு முக்கியகோரிக்கைகளைமுன்வைத்து வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டமானது நடத்தப்பட்டது.

அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாகவே இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் 30 கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர்.



தமிழக அரசு தொழில் முனைவோரின் கோரிக்கையை ஏற்று இந்த கட்டண உயர்வுகளை திரும்ப பெற வேண்டும் என தொழில் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மின்கட்டண உயர்வால் உற்பத்தியாகும் பொருட்களின் விலை 35% அதிகரிக்கும் எனவும் இந்த பாதிப்பு என்பது அனைவருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர்.

தொழில்துறையினருக்கு வேலைகளுக்கான ஆர்டர்கள் குறைந்துவதுடன், அடிப்படை தேவையாக இருக்கும்அனைத்து பொருட்களின் விலையும் உயரும் என்பதால் தமிழகத்தில் வெளி மாநில பொருட்கள், மற்றும் வெளிநாட்டு பொருட்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.



போலியான பொருட்கள் உற்பத்தி செய்யபட்டு சந்தைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் மின்கட்டண உயர்வால் மின்சாரம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவாகும் என்றும் கூறியுள்ளனர். தமிழக மின்சார வாரியம் மின்கட்டண வருவாய் தொடர்பான வெள்ளையறிக்கை வெளியிட வேண்டுமெனவும் தொழில் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த போராட்டத்தில் பாஜக-வினர் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டுஆதரவு தெரிவித்தனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...