கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சாதி ஒழிப்பு மாவீரர்கள் நாள் கருத்தரங்கம்

கோவை ரயில் நிலையம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சாதி ஒழிப்பு போராட்டத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


கோவை: கடந்த 1957ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதிசாதி ஒழிப்பிற்காக மாபெரும் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றது. அன்றைய தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய சட்ட பிரிவுகள் சிலவை சாதியை பாதுகாப்பது போல் உள்ளதாக கூறி அதனை எரித்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அந்தப் போராட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிறையிலேயே உயிரிழந்தனர்.

இந்த நிகழ்வை தொடர்ந்து ஆண்டுதோறும் அந்த போராட்டத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினமும் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.



கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன் தலைமையில்கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேராசிரியர் சாரோன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடக் கழக மாநில அமைப்பு செயலாளர் ஆறுசாமி, வெளியீட்டு செயலாளர் மனோகரன், பெரியார் மற்றும் அம்பேத்கர் உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...