துடியலூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு பள்ளியில் இலவச கண் மருத்துவ முகாம்

துடியலூர் பகுதி தி.மு.க சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளக்கிணரு அரசு பள்ளியில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


கோவை: திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு துடியலூர் பகுதி திமுக சார்பில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேற்கு ரோட்டரி கிளப், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து வெள்ளகிணறு வி.சி.வி.அரசு மேல்நிலை பள்ளியில் பகுதியில் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

மருத்துவ முகாமைதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தொடங்கி வைத்தார். முகாமில் கண்ணில் புரை உண்டாகுதல், மாறுகண்,நீர் அழுத்தம், மாலை கண் நோய், சீழ் மற்றும் நீர் வடிதல், தூர பார்வை, கிட்ட பார்வை, ஆகியவற்றிற்கு மருத்துவர்களால் இலவச பரிசோதனை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை தேவைப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முகாமில் சுற்றுப் பகுதிகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட அவை தலைவர் பழனியப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம், வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கற்பகம் ராஜசேகர், புஷ்ப மணி அருள்குமார், சுமதி,சித்ரா தங்கவேலு, சாந்தாமணி பச்சைமுத்து,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...