துடியலூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு பள்ளியில் இலவச கண் மருத்துவ முகாம்

துடியலூர் பகுதி தி.மு.க சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளக்கிணரு அரசு பள்ளியில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


கோவை: திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு துடியலூர் பகுதி திமுக சார்பில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேற்கு ரோட்டரி கிளப், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து வெள்ளகிணறு வி.சி.வி.அரசு மேல்நிலை பள்ளியில் பகுதியில் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

மருத்துவ முகாமைதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தொடங்கி வைத்தார். முகாமில் கண்ணில் புரை உண்டாகுதல், மாறுகண்,நீர் அழுத்தம், மாலை கண் நோய், சீழ் மற்றும் நீர் வடிதல், தூர பார்வை, கிட்ட பார்வை, ஆகியவற்றிற்கு மருத்துவர்களால் இலவச பரிசோதனை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை தேவைப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முகாமில் சுற்றுப் பகுதிகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட அவை தலைவர் பழனியப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம், வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கற்பகம் ராஜசேகர், புஷ்ப மணி அருள்குமார், சுமதி,சித்ரா தங்கவேலு, சாந்தாமணி பச்சைமுத்து,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...