வடவள்ளி அருகே பட்டப்பகலில் பெண்ணை மிரட்டி 25 சவரன் நகை, ரூ.7 லட்சம் பணம் மற்றும் காரை கொள்ளை - மர்ம நபர் கைவரிசை..!

கோவை வடவள்ளி அருகே பூக்கடை உரிமையாளர் பெரியசாமியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர், தனியாக இருந்த அவரது மனைவியை மிரட்டி 25 சவரன் நகை, ரூ.7லட்சம் மற்றும் ஆல்டோ கார் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி மாதவன் நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர், பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல 10 மணி அளவில் பெரியசாமி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது மகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது திடீரென வீட்டிற்கு புகுந்த இரண்டு இளைஞர்கள் மகேஸ்வரியின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து வீட்டில் இருந்த பீரோவில் வைத்திருந்த 25 சவரன் நகை, ரூ.7லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பள்ளி படித்து வரும் மகனை கொலை செய்ய வந்ததாகவும் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருப்பதால் எங்களுக்கு கொல்ல மனமில்லை என்று கூறிவிட்டு, வீட்டின் வெளியே இருந்த காரைஎடுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பெரியசாமி அளித்த புகாரின் பேரில், சம்பவஇடத்திற்கு வந்த வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் வீடு புகுந்து நகை, பணம், மற்றும் கார் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் இருவர் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...