கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் முறைகேடு - முன்னாள் காவலாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

புலியகுளம் விநாயகர் கோவிலில் பூஜை பொருட்கள், பால், அர்ச்சனை சீட்டு உள்ளிட்டவற்றில் முறைகேடு நடப்பதாகவும், கோவில் நிர்வாகிகள் பக்தர்களிடம் வெளிப்படையாக பணம் வாங்குவதாகவும் முன்னாள் காவலாளி குமரேசன் குற்றச்சாட்டு.


கோவை: கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக புலியகுளம் விநாயகர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில்காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் குமரேசன்.



இந்நிலையில் அவர் புலியகுளம் விநாயகர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.



அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவிலில் பூஜை பொருட்கள் வாங்குவது, பால் அபிஷேசகத்திற்காக பால் வாங்குவது, அர்ச்சனை சீட்டு வழங்குவது, போன்றவற்றில் முறைகேடு நடக்கிறது.

கோவில் நிர்வாகிகள் பக்தர்களிடம் வெளிப்படையாக பணம் வாங்குகின்றனர். விஐபிக்களுக்கு மட்டும் தீபாராதனை காட்டப்படுகிறது. இதனை கோவில் தலைவர் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்.

இது போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம்உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...