பாரதியார் பல்கலையில் 97,123 மாணவர்களுக்கு இன்று பட்டமளிப்பு விழா


கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் அறிவியல் மருத்துவர், முனைவர், இளநிலை முனைவர், இளங்கலை மற்றும் முதுகலை உள்ளிட்ட மாணவர்களுககு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.



இவ்விழாவில் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் கணபதி. முதன்மை விருந்தினராக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மேன்மைமிகு விஞ்ஞானி சசிபாலா சிங், பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அர.சுப்பையன் மற்றும் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டனர்.

இதில், பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கணபதி தலைமையேற்று வரவேற்புரை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இயலாத தமிழக ஆளுநரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமாகிய வித்யாசாகர் ராவ் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.வி.அன்பழகன் ஆகியோருக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், தான் பாரதியார் பல்கலைக் கழகத்தின் 10-வது துணைவேந்தராக பதவியேற்ற பின்பு பல்கலைக் கழகத்தின் தரத்தினை இந்திய அளவில் 14-வது இடத்திற்கும், தமிழக அளவில் முதலிடம் பிடித்ததையும் பெருமையுடன் குறிப்பிட்டார்.

மேலும், என்ஏஏசி கமிட்டியின் "ஏ" சான்றிதழ் பெற்றதையும், ஆராய்ச்சி பணிகளில் பல்கலைக் கழகத்தின் பங்களிப்பையும் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளையும் குறிப்பிட்டார்.



இதைத்தொடர்ந்து பேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தில் (டிஆர்டீஓ) தலைமை இயக்குநர் சசிபாலா சிங், பட்டங்கள் பெற்ற மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும், உலகிலேயே இந்தியாவில் தான் 15-30 வயது வரை 40 சதவிகிதம் இளைஞர்கள் உள்ளனர். தற்போது இந்தியா வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து வளர்ந்த நாடுகள் பட்டியலுக்கு வேகமாக முன்னேறி வருகிறது. 20-ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மகத்தானது என்று குறிப்பிட்டார்.

மேலும், இயற்கை பேரிடர்களில் சிக்கும் ராணுவ வீர்ர்களை மீட்க மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விழாவில் முன்னாள் துணை வேந்தர் சுப்பையன் முதலில் அறிவியல் மருத்துவர் பட்டம் பெற்றார். இதைத்தொடர்ந்து, பட்டமளிப்பு விழாவில் 3 அறிவியல் மருத்துவர் பட்டங்கள், 1020 முனைவர் பட்டங்கள், 2250 இள முனைவர் பட்டங்கள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் என மொத்தம் 97123 பட்டங்கள் வழங்கப்பட்டது.

இதில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர் சபன் பரீத் பொருளாதாரவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...