கோவையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு

கோவை கவுண்டம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து 12 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்த போலீசார்,ஜாமினில் அவர்களை விடுதலை செய்தனர்.


கோவை: துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவுண்டம்பாளையம் அருகே உள்ள சேரன் நகர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில்அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்ட போலீசார், விடுதி ஒன்றில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன், ராஜேஷ், கண்ணப்ப நகரைச் சேர்ந்த வேடியப்பன், சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விமல் ராஜ், பி.என்.புதூரைச் சேர்ந்த கார்த்திக் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

இதனைதொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 12 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்ததுடன் 5 பேரையும் காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...