கோவையில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த ஒருவரை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல், சந்தேகத்தின் பேரில் அங்கு நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது அவர் அதே பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை பாலக்காட்டில் இருந்து வாங்கிவந்து திருட்டுத் தனமாக விற்று வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த போலீசார் கேரள லாட்டரி டிக்கெட்டுகள், பில் புக், 200 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனைதொடர்ந்து அந்த நபரை சிறையில் அடைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது அவர் அதே பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை பாலக்காட்டில் இருந்து வாங்கிவந்து திருட்டுத் தனமாக விற்று வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த போலீசார் கேரள லாட்டரி டிக்கெட்டுகள், பில் புக், 200 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனைதொடர்ந்து அந்த நபரை சிறையில் அடைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.