விவசாய பணியில் 10 பேர் செய்யும் வேலையை ஒரே நேரத்தில் செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்த கோவை நிறுவனம்

விவசாய நிலங்களில் களையெடுப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் அக்ரி ஈசி என்ற இயந்திரத்தை கோவை சேர்ந்த தனியார் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.


கோவை: நிலத்தில் இறங்கி வேளாண் பணிகளை மேற்கொள்ள சமீபகாலமாக ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே அதனை ஈடுகட்டும் விதமாக இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.



அந்த வகையில் களையெடுப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அக்ரி ஈசி என்ற இயந்திரத்தை கோவையை சேர்ந்த புல் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த இயந்திரத்தை கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சீதாலட்சுமி அறிமுகப்படுத்தி வைத்தார்.



"அக்ரிஈஸி" இயந்திரம் மின்சாரத்தில் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய லித்தியம் பேட்டரியால் இயக்கப்படுகிறது. இந்த எந்திரம் களை எடுப்பது மட்டுமின்றி சில மாற்று உபகரணங்களை உபயோகப்படுத்தி பயிர்களுக்கு மருந்து தெளிக்க, பளு தூக்க மற்றும் பல விவசாய பணிகளையும் செய்யும் விதத்தில் உருவக்கப்பட்டுள்ளது.

தேவைக்கேட்ப மாற்று உபகரணங்களை நான்கு நிமிடத்தில் பொருத்தி அதற்கான பணிகளை செய்யும் வண்ணம் இந்த "அக்ரிஈஸி" வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை பயன்படுத்தி 10 வேலையாட்கள் செய்யும் பணிகளை ஒரு நபரால் செய்யமுடியும் என அதனை வடிவமைத்துள்ள புல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

களை எடுப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 8 ரூபாய் மட்டுமே செலவாகும் என்றும் இந்த இயந்திரத்தை மண்ணின் தன்மையை பொருத்து 5 மாறுபட்ட வேகங்களில் இயக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் நான்கரை மணி நேரம் தொடர்ந்து இயக்கமுடியும் என தெரிவித்துள்ள புல் நிறுவனம், இயந்திரத்தில் இருக்கும் தெளிப்பான் 33 லிட்டர் கொள்ளளவு கொண்டது என தெரிவித்துள்ளது. இந்த இயந்திரம் சுமார் 80 கிலோ வரை எடை தூக்க வல்லமை கொண்டது என தெரிவித்துள்ள அந்நிறுவனம் இதில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளதாக கூறியுள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...