கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட கிஷோர் கே சாமியை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அமைதிக்கும் குந்தகம் ஏற்படும்படியாக பதிவிட்டு கைது செய்யப்பட்ட கிஷோர் கே சாமியை, இன்று ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.



கோவை: கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமீஷா முபினின் இறுதி சடங்குகள் நடத்த ஜமாத்துகள் மறுத்த செய்திகளை மையமாக வைத்து அமைதியை குலைக்கும் வகையில் பதிவிட்டதாக வலதுசாரி ஆதரவாளரான கிஷோர் கே.சாமி மீது, கோவை சைபர் கிரைம் போலீசார் சட்ட பிரிவு 153-ன் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் குறித்து அவதூறாக செய்தி பதிவிட்ட வேறொரு வழக்கில் கிஷோர் கே.சாமி ஏற்கனவே சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கோவை சைபர் கிரைம் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கோவை மாவட்ட 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் கிஷோர் கே சாமி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கிஷோர் கே சாமியை இன்று ஒரு நாள் (நவ 28) காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

இதையடுத்து, போலீசார் அவரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று உடற் பரிசோதனை செய்தனர். பின்னர் கோவை மாநகர காவல் ஆணையர் வளாகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...