கோவை அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு வைத்த வழக்கு-தேடப்படும் குற்றவாளியாக முஜிபூர் ரஹ்மான் அறிவிப்பு

கோவை கிளாசிக் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு வைத்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் முஜிபூர் ரகுமான் என்பவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த கோவை குற்றவியல் நீதிமன்றம் டிசம்பர் 23-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.


கோவை: கோவை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள கிளாசிக்கார்டன் குடியிருப்பின் கார் பார்கிங் பகுதியில் கடந்த 1997-ம்ம ஆண்டு மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டை வைத்து விட்டு தப்பிச்சென்றனர்.

ஆனால் குடியிருப்பின் காவலாளி அந்த வெடி குண்டு பேக்கை பார்த்துவிட்டு உடனடியாக அதை வெளியே உள்ள குப்பை தொட்டியில் வைத்து விட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். பின்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணையின் முடிவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டு தற்போது இவ்வழக்கானது நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கில் 11 ஆவது குற்றவாளியான ஷாஜகான் மற்றும் 12 ஆவது குற்றவாளியான முஜிபூர் ரகுமான் ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு மேற்படி ஷாஜகானை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு தற்போது பிணையில் இருந்து வருகிறார்.

ஆனால் 12-வது குற்றவாளியான போத்தனூரை சேர்ந்த முஜிபூர் ரகுமான் என்பவர் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 23-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அவரது வீடு மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசாரால் நோட்டீஸ் ஒட்டப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...