பள்ளி, கல்லூரிகளில் ஆவின் மையம் அமைப்பது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பாக பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகளில் ஆவின் மையம் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆவின் ஒன்றியத் தலைவர் ப.வெ.தாமோதரன் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் த.கிருஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் கூறுகையில், ஆவின் நிறுவனம் இலாபம் நோக்கமில்லாமல் இயங்கும் ஒரு கூட்டுறவு நிறுவனம் ஆகும். நேரடியாக விவசாயிகளிடமிருந்து பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெறப்பட்ட பால் மாவட்ட பண்ணைகளுக்கு நேரடியாக அனுப்பபடுகிறது.

ஆவின் நிறுவனம் பொதுமக்களின் நலனிலும் உடல் ஆரோக்கியத்தையும் மையாமாக்க கொண்டு 3 சதவிகிதம் குறைந்த அளவு கொழுப்புச்சத்து கொண்ட சமன்படுத்திய பால், 4.5 சதவிகிதம் கொழுப்புச் சத்துள்ள நிலைப்படுத்திய பால், 6 சதவிகிதம்  கொழுப்புச் சத்துள்ள நிறை கொழுப்புப்பால் என மூன்று வகையான பால் நுகர்வோர்களுக்கு அரசு நிர்ணயித்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது விற்பனையை அதிகபடுத்தும் நோக்கில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகளில் ஆவின் மூலம் தரமாகவும் நுகர்வோர் பயன்பெரும் வகையில் கடைகள் அமைக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அனைவரும் ஆரோக்கியமாகவும் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழ வேண்டும் என்ற நோக்கில் ஆவின் மூலம் கடைகள் அமைக்கப்பட்டு நுகர்வோர்களுக்கு பால், நெய், வெண்ணெய், ஐஸ்கிரிம், பன்னீர் போன்ற பொருட்கள் விற்பணை செய்யும் பொருட்டு நடவடிக்ககைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஆவின் பொது மேலாளர் சுமதி, துணை பொது மேலாளர் (விற்பனை) ரமேஸ்குமார், உதவி பொது மேலாளர் சக்கரவர்த்தி (தரக்கட்டுப்பாடு), ராஜேஸ் (பண்ணை) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...