கோவை துடியலூர் காவல் நிலைய வளாகத்தில் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம்

கோவை துடியலூர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.


கோவை: கோவை துடியலூர் காவல் நிலையம், ஜே.எம்.ஜே. ஹவுசிங் அறக்கட்டளை மற்றும் கோவை மத்திய அரிமா சங்கம் இணைந்து இலவச சர்க்கரை நோய் கண்டறிதல்,விழிப்புணர்வு முகாம், சர்க்கரைநோயாளிகளுக்கு கண் பரிசோதனை முகாம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம் துடியலூர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில்நடைபெற்ற முகாமில் ல் சிறப்பு விருந்தினர்களாக கோவை மத்திய அரிமா சங்க மாவட்ட கவர்னர் ராம்குமார், முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாபுதீன் பங்கேற்றனர்.

இம்முகாமில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக சர்க்கரை நோய் கண்டறிதல் நடத்தப்பட்டது. மேலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் விழித்திரை பாதிக்கப்பட்டுள்ளதா என கண்டறியப்பட்டு இலவசமாக லேசர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்போக்குவரத்தை சீர் செய்ய ஜே.எம்.ஜே. ஹவுசிங் நிறுவனம் சார்பில் அதன் மேலான் இயக்குநர் வில்சன் பி தாமஸ்பேரி கார்டுகளை துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரனிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...