கோவை கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ தார்சாலை அமைக்கும்‌ பணிகள் - மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ தார்சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மேயா்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வாடு எண்‌.24-க்குட்பட்ட கொடீசியா சாலை முதல்‌ தண்ணீர்பந்தல்‌ சாலை வரை தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ்‌ ஆயிரத்து 470 மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அந்த பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு, பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌.



மேலும்‌, சாலையின்‌ நீளம்‌, அகலத்தினை பொறியாளர்கள் மூலம்‌ அளவீடு செய்வதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர், தார்சாலையின்‌ தரத்தை உறுதி செய்திட அதன்‌ மாதிரியினை ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்திடவும்‌ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, துணை மேயர்‌ வெற்றிசெல்வன்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ஷர்மிளா, மாமன்ற உறுப்பினர்‌ பூபதி மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...