கோவை பெரியநாயக்கன் பாளையம் ஒன்றிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டம் - முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை..!

கோவை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பெரியநாயக்கன் பாளையம் ஒன்றிய அளவிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.


கோவை: கோவை மேற்குபெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்டகொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பன்னீர்மடை பகுதியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை கோயில் மண்டபத்தில் கடந்த 27 ஆம் தேதி மாலை 06.30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை பொருளாளர் சண்முகக் கவுண்டர் மற்றும் முன்னாள் பொருளாளர் முருகேச கவுண்டர் ஆகியோர் தலைமைதாங்கினர்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் M.S.மணி மற்றும் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா மற்றும் ஒன்றிய செயலாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய பொறுப்பாளர்கள் தங்கவேல், P.M.இங்கோவன், ஜெகநாதன், மாணிக்க வாசகம் மற்றும் பன்னீர்மடை ஊராட்சி செயலாளர் சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிப் பணிகள், விரைவில் நடைபெற இருக்கும் கொடியேற்று விழா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் ஒன்றிய துணை செயலாளர் பொன்னுசாமி இறுதியாக நன்றியுரை கூறினார். மேலும் மாவட்ட, ஒன்றிய, நகர , பன்னீர்மடை ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணி, தீரன் படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பலரும்ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...