கோவை மணியகாரம்பாளையம் அருகே பொதுச் சாலை ஆக்கிரமிப்பை போலீசார் உதவியுடன் அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்..!

கணபதி அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் பொதுச் சாலையை இருபுறமும் கேட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்ததை குழாய் பதிக்கும் பணிக்காக ஜேசிபி மூலம் காவல்துறை உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.



கோவை: கோவை மாவட்டம் கணபதி அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் சீனிவாசா நகர் செல்லும் சாலையோரத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.



இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் கோவை மாநகராட்சி நகர்ப்புற மேம்பாட்டு அலுவலர் விமலா தலைமையில் அதிகாரிகள் குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



அப்போது அப்பகுதியில் இருந்த ஒரு புதிய குடியிருப்பு வழியாக சென்ற சாலையை ஆக்கிரமித்து கேட் அமைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அவ்வழியாக குழாய்களைக் கொண்டு செல்வதற்கு குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



இதனையடுத்து உடனடியாக சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.



இந்நிலையில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கேட்களை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்ற முயற்சித்தனர்.



இதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக அகற்ற வேண்டாம், கால அவகாசம் கொடுங்கள் என மாநகராட்சி அலுவலரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.



இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர், முதல்வர் தனிப்பிரிவு ஆகியோருக்கு தகவல் அனுப்பி உள்ளதாகவும் அதற்கு பதில் கிடைத்த பின் மாநகராட்சி பணி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.



இந்நிலையில், மாநகராட்சி அதிகாரியின் உத்தரவின் பேரில் இருபுறமும் இருந்த கேட்டுகள் அகற்றப்பட்டன. குழாய் பதிக்கும் பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கும் என கூறிவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.



இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...