கோவை சூலூரில் 92 வயது மூதாட்டிக்கு நேரில் சென்று விவசாய ஊக்கத்தொகையை வங்கியில் நேரடியாக வழங்க வழிவகை செய்த வேளாண் நலத்துறை..!

சூலூரில் வயது முதிர்வு காரணமாக விவசாய ஊக்கத்தொகை வாங்க முடியாமல் இருந்த மூதாட்டிக்கு வேளாண் நலத்துறை சார்பில் வீட்டுக்கே சென்று விவசாய ஊக்கத்தொகையை நேரடியாக வழங்க வழிவகை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் சூலூரில் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் 13வது தவணைத் தொகை பெறுவதற்காக இ.கே.ஒய்.சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதன்படி அனைத்து விவசாயிகளும் தங்களது தொலைபேசி எண்ணை ஆதாரில் இணைக்க வேண்டும் என வேளாண் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்து புதுப்பித்து வருகின்றனர். மேலும் வேளாண் நலத்துறை அலுவலகத்திற்கு வந்து புதுப்பிக்க முடியாத விவசாயிகளுக்கு நேரில் சென்று அவர்களுடைய ஆவணங்களை சரிபார்த்து புதுப்பிக்க வேண்டும் என வேளாண்மை நலத்துறை தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.



அதன் அடிப்படையில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக கண்ணம்பாளையத்தை சேர்ந்த 92 வயது மூதாட்டிக்கு, வேளாண் நலத்துறை மற்றும் தபால் துறை சார்பில் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று கைரேகையை பதிவு செய்து அவருடைய வங்கி கணக்கு பணத்தை செலுத்துவதற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இ.கே.ஒய்.சி செய்து பணத்தை வங்கியில் கிடைப்பதற்கான வழிவகை செய்தனர்.



இது குறித்து மூதாட்டியின் பேத்தி கலைச்செல்வி பேசியதாவது, வீட்டிற்கு வந்து கிசான் திட்டத்தின் மூலம் அதிகாரிகள் விவசாய ஊக்கத்தொகை வழங்குவதற்கான வழிவகை செய்தனர். இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...