நீலகிரி உதகை - மசினகுடி நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த மக்னா யானை - வாகன ஓட்டிகள் அச்சம்..!

மக்னா யானை வழிமறித்ததால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திய நிலையில், சுமார் அரை மணி நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்ற பின் போக்குவரத்து சீரானது.



நீலகிரி: உதகை அருகே உள்ள மசினகுடி பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்காக ஊட்டிக்கு தான் வந்து செல்ல வேண்டும்.

அதற்காக அவர்கள் மசினகுடி - மாவனல்லா - கல்லட்டி மலைப்பாதையை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சார்ந்த சுற்றுலா பயணிகளும் இந்த சாலை வழியாக தான் உதகைக்கு வருகின்றனர்.

சுமார் 30 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த நெடுஞ்சாலையின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி இருப்பதால் அடிக்கடி காட்டு யானைகள் சாலை ஓரத்திற்கு வருவது வழக்கமாக உள்ளது.



இந்த நிலையில் நேற்று மாலை மக்னா யானை என்று அழைக்கக்கூடிய தந்தம் இல்லாத ஆண் யானை ஒன்று பொக்காபுரம் சாலை சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலையின் குறுக்கே வாகனங்களை வழிமறித்து நின்றது.



இதனை கண்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள் இருபுறமும் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர்.



இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இந்நிலையில், மக்னா யானை வனப்பகுதிக்குள் சென்றதை எடுத்து போக்குவரத்து சீரானது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...