உலக மண் தினத்தை முன்னிட்டு டிச.5-ல் மண்‌ காப்போம்‌ இயக்கம்‌ சார்பில்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக மண்‌ தினத்தை முன்னிட்டு டிசம்பர்‌ 5-ம்‌ தேதி ஈஷா மையத்தின் மண்‌ காப்போம்‌ இயக்கம்‌ சார்பில் ‌தமிழகம்‌ முழுவதும்‌பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு.


சென்னை: உலக மண்‌ தினத்தை முன்னிட்டு மண்‌ காப்போம்‌ இயக்கம்‌ சார்பில்‌ மண்‌ வளப்‌ பாதுகாப்பின்‌ முக்கியத்துவம்‌ குறித்து பொதுமக்களிடம்‌ விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தில் 60க்கும்‌ மேற்பட்ட இடங்களில்‌ டிசம்பர்‌ 5-ம்‌ தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்‌ நடைபெறவுள்ளது.

இது தொடர்பான சென்னை பிரஸ்‌ கிளப்பில்‌ காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ மாநில கள ஒருங்கிணைப்பாளர்‌ செய்தியாளர்களிடம் பேசியதாவது,



சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும்‌ வரும் 5-ம்‌ தேதி காலை 8 மணி முதல்‌ 9 மணி வரை பேருந்து நிலையம்‌, ரயில்‌ நிலையம்‌, கடற்கரை உள்ளிட்ட பொது மக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்களில்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்‌ நடத்தப்பட உள்ளது.

'மண்ணுக்காக நடப்போம்‌' 'மண்ணுக்காக நிற்போம்‌' 'மண்ணுக்காக சைக்கிள்‌ பேரணி' உள்ளிட்ட நிகழ்ச்சிகள்‌ தமிழ்நாடு முழுக்க மண்‌ காப்போம்‌ இயக்கத்தின்‌ தன்னார்வ தொண்டர்கள்‌ தமிழகத்தின்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ நடத்த திட்டமிட்டுள்ளனர்‌.

சென்னையில்‌ மடிப்பாக்கம்‌ ஏரிக்கரை, எலியட்ஸ்‌ கடற்கரை, மீனாட்சி கல்லூரி, கபாலீஸ்வரர்‌ கோயில்‌ உள்ளிட்ட இடங்களிலும்‌, மதுரை தேவர்‌ சிலை, வேலூர்‌ கோட்டை, ஓசூர்‌ ரயில்‌ நிலையம்‌, ராமேஸ்வரம்‌ ராமநாத சுவாமி கோயில்‌ போன்ற மக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்களில்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்‌ நடைபெறவுள்ளது.

அதே நாளில் இந்தியா முழுவதும்‌ உள்ள அனைத்து மாநிலங்களிலும்‌ பல்வேறு நிகழ்ச்சிகள்‌ நடைபெறவுள்ளது மண்‌ வள பாதுகாப்பு குறித்து சட்டங்கள்‌ மற்றும்‌ கொள்கைகளை உருவாக்க வேண்டும்‌ என்பதை வலியுறுத்தி ஈஷா நிறுவனர்‌ சத்குரு ஜக்கி வாசுதேவ், மண்‌ காப்போம்‌ என்ற சர்வதேச சுற்றுச்சூழல்‌ இயக்கத்தை தொடங்கி உள்ளார்‌.

தற்போது விவசாய மண்ணில்‌ கரிம சத்தின்‌ அளவு 0.5% என்ற அபாயகரமான அளவில்‌ உள்ளது. இதனை குறைந்தபட்ச அளவான 3 முதல்‌ 6% வரை அதிகரிக்க வேண்டும்‌. இல்லையெனில்‌ உணவுப்‌ பற்றாக்குறை, பருவநிலை மாற்றம்‌, வாழ்வாதார இழப்பு, மக்கள்‌ இடம்பெயர்தல்‌ உள்ளிட்ட பல பிரச்சினைகள்‌ உருவாகும்‌.

மார்ச்‌ 21-ம்‌ தேதி லண்டனில்‌ இருந்து தனது மோட்டார் சைக்கிள்‌ பயணத்தை தொடங்கிய சத்குரு இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ்‌, உள்ளிட்ட பல ஐரோப்ப நாடுகளுக்கு பயணித்துள்ளார்‌. அந்த நாடுகளில்‌ வேளாண்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ துறை அமைச்சர்கள்‌, அரசியல்‌ தலைவர்கள்‌, விஞ்ஞானிகள்‌, சினிமா பிரபலங்கள்‌, ஊடக துறையினர்‌ என பல்வேறு தரப்பினர்‌ சந்தித்து கலந்துரையாடினார்‌.

ஐரோப்பாவில்‌ இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற அவர்‌ இந்தியாவிற்கு வந்து தமிழ்நாட்டில்‌ தனது பயணத்தை நிறைவு செய்தார்‌. சர்வதேச அளவில்‌ பெரும்‌ தாக்கத்தை ஏற்படுத்தி வரும்‌ மண்‌ காப்போம்‌ இயக்கம்‌ 391 கோடிக்கும்‌ அதிகமான மக்களின்‌ ஆதரவைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...