கோவையில் நடைபெற்று வரும் கிராம உதவியாளர் தேர்விற்கு 3,505 பேர் விண்ணப்பம் - 9 வட்டங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது…!

கோவை மாவட்டத்தில் பேரூர், மதுக்கரை, பொள்ளாச்சி உள்ளிட்ட 9 தாலுக்காவில் நடைபெறும் இந்த கிராம உதவியாளர் தேர்விற்கு 3,505 பேர் விண்ணபித்து தேர்வு எழுதி வருகின்றனர். வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது.


கோவை: தமிழகத்தில் உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

வாசித்தல், எழுதுதல் என இரண்டு நிலையில் இந்த தேர்வானது நடைபெறும். அதன்படி, எதாவது ஒரு புத்தகத்தில் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல, ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத வைக்கலாம். இதற்கு 30 மதிப்பெண் வழங்கப்படும்.

அதன்பின், நேர்காணல் தேர்வு, மூல சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் அதிகபட்ச மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.



கோவை மாவட்டத்தில் பேரூர், மதுக்கரை, பொள்ளாச்சி உள்ளிட்ட 9 தாலுக்காவில் நடைபெறும் இந்த கிராம உதவியாளர் தேர்விற்கு 3,505 பேர் விண்ணபித்து தேர்வு எழுதி வருகின்றனர். வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட தேர்வாளர்கள் பட்டியல் மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...