அரசுக்கு சொந்தமான கோவிலை அறநிலையத்துறை தனியாருக்கு தாரை வார்ப்பதாக கூறி சிவனடியார் ஒருவர், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சங்கு உதி, உடுக்கை அடித்தபடி நூதன முறையில் மனு அளித்தார்.
கோவை: கோவை மாவட்டத்தின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக வெள்ளியங்கிரி மலை சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சிறப்பு தினங்களில் லட்சக்கணக்கான மக்கள் சிவனை தரிசனம் செய்வதற்காக வருகின்றனர்.
இந்நிலையில் மலை கோவில் உண்டியல் ஏலம் மற்றும் கடைகளை தனியார் வசம் தர தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், இந்து அறநிலையத்துறையை கண்டித்து செந்தில் குமார் என்ற சிவனடியார், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கு ஊதி, உடுக்கை அடித்து நூதனமான முறையில் மனு அளித்துள்ளார்.
அவரது மனுவில் அறநிலையத்துறை, உயர்நீதிமன்ற தீர்ப்பை அரசு அவமதித்தாகவும், அரசுக்கு சொந்தமான கோவிலை தனியாருக்கு தாரை வார்ப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.