சூயஸ் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சமூக நீதிக் கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

சூயஸ் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பொது குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படுவதால், சூயஸ் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய பரிந்துரைக்க வலியுறுத்தி சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் மனு.



கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த குடிநீர் விநியோகம் சூயஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.



இந்நிலையில் இதனை ரத்து செய்யக்கோரி சமூக நீதி கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

அவரது மனுவில், கோவை மாநகராட்சியின் 78 மற்றும் 79 ஆகிய வார்டு பகுதிகளில் சூயஸ் குடிநீர் குழாய் அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாய் இணைப்புகளை மாநகராட்சி நிர்வாகம் துண்டித்து வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

இதன் காரணமாக குடிநீர் விநியோக ஒப்பந்த உரிமையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதை ரத்து செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.



மனு அளிக்க வந்தவர் மாதிரி குடிநீர் குழாய் மற்றும் கண்டன பதாகைகளை கையில் ஏந்தியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனது கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...