வருமான வரித்துறை வளர்ச்சியில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது - கோவையில் வருமான வரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன்

மேற்கு மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் வருமான வரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன், வரி ஏய்ப்பு தொடர்பான தகவலை திரட்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் வருமான வரி ஏய்ப்பு செய்பவர்களிடம் ஆன்லைன் மூலமே விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.


கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் ஆய்வு மேற்கொண்டு வரும் வருமான வரித்துறை ஆணையாளர் ரவிச்சந்திரன், இன்று மேற்கு மண்டலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அகில இந்திய அளவில் வருமான வரித்துறை வளர்ச்சியில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. கூடுதலாக வசூல் செய்யப்பட்ட வரி திரும்ப வரவில்லை என்று புகார் இருந்தால் அந்த புகாரை சரி செய்ய கூடுதல் கவனம் செலுத்தி உள்ளோம்.

இந்த ஆண்டு வருமான வரி செலுத்த பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி உள்ளோம். ஆன்லைன் வழியாக வரி செலுத்தும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு பின்னர் வரி வசூல் 12 முதல் 13% குறைந்து இருந்தது. ஆனால், 2021-2022- ல் 40% வரி வசூல் அதிகரித்துள்ளது. 2022-2023 ஆண்டிலும் கிட்டத்தட்ட வரி வசூல் 40 சதவீதத்தை நெருங்கியுள்ளது.

வரி ஏய்ப்பு தொடர்பான தகவலை திரட்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்கள் எப்படியும் சிக்கிக் கொள்வார்கள். வருமான வரி ஏய்ப்பு செய்பவர்களிடம் ஆன்லைன் மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆவணங்களும் ஆன்லைன் மூலமே சரிபார்க்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் விசாரணை நடக்கும் போது ஒரு குறிப்பிட்ட அதிகாரி தான் விசாரிப்பார் என்ற நிலை இருக்காது.

நாட்டிலுள்ள ஏதாவது ஒரு அதிகாரி தான் விசாரணை நடத்துவார். வருமான வரி சோதனை தொடர்பான தகவல்களை தர மறுப்பது பயனாளர்களின் ரகசியங்களை பாதுகாக்க தான். முறையாக வரி செலுத்துவோருக்கு சிறப்பு போர்டல் வசதி உள்ளது.

வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு சிறை தண்டனையும் பெற்றுக் கொடுத்து உள்ளோம், இவ்வாறு ரவிச்சந்திரன் கூறினார்.

Newsletter

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....