கோவை சுந்தராபுரத்தில் பரதநாட்டிய பள்ளியில் சாமி சிலைகளை திருட்டு - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

நடன பள்ளியில் இருந்த நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை, இரண்டு குத்து விளக்குகளை மர்ம நபர்கள் எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியைச் சேர்ந்தவர் முரளி (வயது 50). இவர் அதே பகுதியில், கடந்த 20 ஆண்டுகளாக பரத நாட்டிய பள்ளி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மாணவர்களுக்கு நடன பயிற்சி முடிந்ததும் பரத நாட்டிய பள்ளியை பூட்டிவிட்டு முரளி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நடன பள்ளிக்கு முரளி செல்லவில்லை.

இன்று காலை வழக்கம்போல நடன பள்ளிக்கு வந்த போது, நடனப் பள்ளியின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து முரளி அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அவர் உள்ளே சென்று பார்த்தபோது நடன பள்ளியில் இருந்த நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை, இரண்டு குத்து விளக்குகள் காணாமல் போய் இருந்தது.

சாமி சிலைகள், குத்து விளக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்ததையடுத்து, திருட்டு குறித்து முரளி, குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார், தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, 2 மர்ம நபர்கள் பையில் வைத்து சிலைகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...