ஜி.கே.என்.எம் மருத்துவமனை ரக்ஷா ஹாஸ்பைஸ் அமைப்புடன் இணைந்து 2001-ம் ஆண்டு முதல் உயர்தரமான இறுதி நிலை மருத்துவ சிகிச்சைகளை கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த நோயாளிகளுக்கு மிகச் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகிறது. ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனன மற்றும் கோவை புற்றுநோய் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து 24வது சர்வதேச இறுதிநிலை மருத்துவ சிகிச்சை கருத்தரங்கத்தினை கோவை கொடிசியா அரங்கில் பிப்ரவரி 1௦-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடத்துகின்றன.
பொதுமக்கள் மற்றும் மருத்துவத் துறையின் மத்தியில் இறுதி நிலை மருத்துவ சிகிச்சை மற்றும் அதன் தேவைகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும். புற்றுநோய், இதயம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள பல்வேறு நுட்பமான தகவல்களை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் இந்த கருத்தரங்கின் வாயிலாக பெற முடியும்.
இந்த மாபெரும் கருத்தரங்கில் 1000-த்திற்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் தங்களது அனுபவம் மற்றும் தாங்கள் இத்துறையில் சேகரித்துள்ள அரிய பல தகவல்களை இந்த கருத்தரங்கம் நடைபெறும் மூன்று நாட்களும் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள உள்ளார்கள்.
பொதுமக்கள் மற்றும் மருத்துவத் துறையின் மத்தியில் இறுதி நிலை மருத்துவ சிகிச்சை மற்றும் அதன் தேவைகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும். புற்றுநோய், இதயம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள பல்வேறு நுட்பமான தகவல்களை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் இந்த கருத்தரங்கின் வாயிலாக பெற முடியும்.
இந்த மாபெரும் கருத்தரங்கில் 1000-த்திற்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் தங்களது அனுபவம் மற்றும் தாங்கள் இத்துறையில் சேகரித்துள்ள அரிய பல தகவல்களை இந்த கருத்தரங்கம் நடைபெறும் மூன்று நாட்களும் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள உள்ளார்கள்.