கோவையில் எந்தவித பரபரப்புமின்றி இதய தெய்வம் மாளிகை: குழப்பத்தில் கட்சித் தொண்டர்கள்!


தமிழக முதலமைச்சர் பன்னீர் செல்வம் நேற்றும் இரவு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெ. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் சசிகலா குறித்தும், தன் அமைச்சரவை சகாக்கள் குறித்தும் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். இதை தொடர்ந்து, தமிழக  அரசியல் களத்தை பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

இரு தரப்பாக பிளவடைந்துள்ள கட்சியில் எந்தபக்கம் செல்வதென்று சட்டமன்ற உறுப்பினர்களுடன்  அ.தி.மு.க தொண்டர்களும் கலக்கமடைந்தனர்.



இந்த நிலையில், கோவை அ.தி.மு.க தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகை எந்த வித பரபரப்புமின்று காட்சியளிக்கிறது. கட்சி தொடர்பான எந்த பிரச்சனையின் போதும், விழாக்களின் போதும் தொண்டர்கள் படை சூழ காணப்பட்ட இதய தெய்வம் மாளிகை தற்போது கலையிழந்து காணப்படுகிறது. கட்சி அலுவலகத்திற்குள் இருக்கும் ஒரு சிலரும் என்ன செய்வதென்று அறியாமல் தொலைக்காட்சியை பார்த்தபடி பெரும் குழப்பத்தில் அமர்ந்துள்ளனர். 

தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுக்கள் வெடித்தும் கொண்டாடி வருகின்ற நிலையில், கோவை மிகுந்த அமைதியான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...