கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய என்.டி.சி மில் தொழிலாளர்களில் 8 நாள் ஊதியத்தை அபராதமாக பிடித்தம் செய்யபோவதாக என்.டி.சி மில் நிர்வாகம் அறிவித்ததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

கோவை புலியகுளம் பகுதியில் மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்தின் கீழ் பங்கஜா மில் செயல்பட்டு வருகிறது. இங்கு 400க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த மாதம் தமிழகம் முழுவதும் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த்து. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த 20 ஆம் தேதி பங்கஜா மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஒருநாள் போராட்டம் நடத்தியதற்க்கு அபராதமாக 8 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பங்கஜா மில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மில் வாயிலை முற்றுகையிட்டு நிர்வாகத்துக்கும் மத்திய அரசுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த மாதத்துக்கான ஊதியதொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். இந்தநிலை நீடித்தால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை புலியகுளம் பகுதியில் மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்தின் கீழ் பங்கஜா மில் செயல்பட்டு வருகிறது. இங்கு 400க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த மாதம் தமிழகம் முழுவதும் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த்து. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த 20 ஆம் தேதி பங்கஜா மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஒருநாள் போராட்டம் நடத்தியதற்க்கு அபராதமாக 8 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பங்கஜா மில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மில் வாயிலை முற்றுகையிட்டு நிர்வாகத்துக்கும் மத்திய அரசுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த மாதத்துக்கான ஊதியதொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். இந்தநிலை நீடித்தால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.