திருப்பூரில் பழைய வேஸ்ட் குடோனில் திடீர் தீ விபத்து - ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகி சேதம்

பெருமாநல்லூர் அடுத்த போயம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய பொருட்கள் குடோனில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையான நிலையில், விளக்கு அல்லது பட்டாசால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த போயம்பாளையம் பகுதியில் இரும்புக்கடை நடத்தி வருபவர் ஶ்ரீ ராம். மேலும் அதே பகுதியில் இவருக்கு சொந்தமாக பழைய பொருட்களை சேமித்து வைக்கும் குடோன் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.



இந்நிலையில் நேற்றிரவு ஏழு மணியளவில், அந்த குடோனிலிருந்து புகை வந்துள்ளது. பின்பு திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக அருகிலிருந்தவர்கள் திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



இதன் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்து குறித்து குடோன் உரிமையாளர் கூறியதாவது, குடோனை இரவு நேரம் பயன்படுத்தாத காரணத்தால் குடோனில் மின் இணைப்பு இல்லை. நேற்று கார்த்திகை தீபம் என்பதால் அருகிலுள்ள வீடுகளிலிருந்து விளக்கோ அல்லது பட்டாசோ விழுந்து தீப்பிடித்திருக்கலாம்.

இந்த தீ விபத்தின் காரணமாக குடோனில் இருந்த கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்து உள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...