கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!

மதுக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் மலைக்கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு ஏற்றப்பட்ட மகா தீபத்தை ஏராளமான பக்தர்கள் வணங்கி வழிபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மகா தீப வழிபாடு நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கால ஊரடங்கின் காரணமாக அரசு விதிமுறைப்படி பக்தர்கள் இல்லாமல் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுபாடுகளின்றி வழக்கமான முறையில் தர்மலிங்கேஷ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.



முன்னதாக கோவில் நிர்வாகிகள் பக்தர்களுடன் கோயிலை வலம் வந்து, நந்தி தேவனுக்கு முன் உள்ள கம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அடிவார பகுதியில் உள்ள விநாயகர், இந்திரலிங்கம், அக்னிலிங்கம், நாக அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் தீபம் ஏற்றப்பட்டது.

இறுதியாக, அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.



இந்த விழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மகா தீபத்தை வணங்கி வழிபட்டனர். தொடர்ச்சியாக வரும் டிசம்பர் 8ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மூன்றாம் நாள் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 3 நாட்கள் தொடர்ந்து மலை உச்சியில் தீபம் எரிவதற்கு பசு நெய்யை கோவிலுக்கு பக்தர்கள் வழங்கி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...