கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!

மதுக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் மலைக்கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு ஏற்றப்பட்ட மகா தீபத்தை ஏராளமான பக்தர்கள் வணங்கி வழிபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மகா தீப வழிபாடு நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கால ஊரடங்கின் காரணமாக அரசு விதிமுறைப்படி பக்தர்கள் இல்லாமல் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுபாடுகளின்றி வழக்கமான முறையில் தர்மலிங்கேஷ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.



முன்னதாக கோவில் நிர்வாகிகள் பக்தர்களுடன் கோயிலை வலம் வந்து, நந்தி தேவனுக்கு முன் உள்ள கம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அடிவார பகுதியில் உள்ள விநாயகர், இந்திரலிங்கம், அக்னிலிங்கம், நாக அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் தீபம் ஏற்றப்பட்டது.

இறுதியாக, அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.



இந்த விழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மகா தீபத்தை வணங்கி வழிபட்டனர். தொடர்ச்சியாக வரும் டிசம்பர் 8ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மூன்றாம் நாள் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 3 நாட்கள் தொடர்ந்து மலை உச்சியில் தீபம் எரிவதற்கு பசு நெய்யை கோவிலுக்கு பக்தர்கள் வழங்கி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...