கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு எதிராக மாநகராட்சி ஊழியர்கள் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம்

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஊழியர்கள் தங்கள் உடலில் பிளாஸ்டிக் பைகளை கட்டிக்கொண்டு, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு எதிராக நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில், மாநகராட்சி ஊழியர்கள் உடல் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை கட்டிக் கொண்டு, பிளாஸ்டிக் பை பயன்பாட்டுக்கு எதிராக நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது. மேலும், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யவும் தமிழக அரசு தடை செய்துள்ளது.



அதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி சார்பில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி பணியாளர்கள் உடல் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை கட்டிக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அரசு எடுக்கும் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



அதேபோல் தமிழக அரசின் பிரச்சாரமான ”மீண்டும் மஞ்சப்பை” என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...