கோவை காந்திபுரத்தில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் புகார்களை பதிவு செய்ய போலீசார் அழைப்பு

காந்திபுரம் 100 அடி சாலை, 3வது வீதியில் இயங்கி வந்த முத்து லேண்ட் டெவலப்பர்ஸ், முத்துவிலாஸ் சிட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார்களை நேரடியாக வந்து பதிவு செய்ய கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு.


கோவை: கோவை காந்திபுரம் 100 அடி சாலை, 3வது வீதியில் முத்து லேண்ட் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், முத்துவிலாஸ் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட், நெல்லை முத்து விலாஸ் ஸ்வீட்ஸ் & குருப்ஸ் மற்றும் தங்க நகை சிறுசேமிப்பு திட்டம் ஆகிய நிறுவனங்கள் இயங்கி வந்தன.

இந்த நிறுவனங்கள் மீதும், அதன் இயக்குநர் பரமசிவம் (49) மற்றும் D.கிருத்திகா ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் பரமசிவம் (49) என்பவர் கடந்த 2019 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதுவரை இந்த நிறுவனங்கள் மீது 2,026 புகார் மனுக்கள் பெறப்பட்டு குற்றப்பத்திரிக்கை மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிகை கோயம்புத்தூர் டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்படி நிறுவனங்களில் முதலீடு செய்து பணம் திரும்ப கிடைக்காமல் ஏமாற்றப்பட்டவர்கள், கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் தங்களுடைய அசல் ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் மனுவை அளிக்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...