சேலம் ரயில்நிலையத்தில் பயணிகள் உதவி மையம் திறப்பு

சேலம் ரயில் நிலையத்திற்கு வந்து போகும் பயணிகளுக்கு உதவ, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரி சங்கர் வர்மா , சேலம் கோட்ட வணிக ஒருங்கிணைப்பு மேலாளர் விஜுவின் தலைமையில் உதவி வணிகமேலாளர்கள், பயணச்சீட்டு பரிசோதகர்கள், நிலைய மேலாளர்கள், நடைமேடை ஆய்வாளர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளார். இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சேலம் ரயில்நிலையத்தில் பயணிகள் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.  



இந்த உதவி மையங்களில் பயணிகளுக்கு தேவையான ரயில்கள் மற்றும் நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்த தகவல், ரயில்பெட்டிகளின் பராமரிப்பு, கழிப்பறைகள் தூய்மை, உணவு வசதிகள், வீல்சேர் வசதி, போர்ட்டர் வசதி போன்ற அனைத்து உதவிகளும் உடன் வந்து நேரில் செய்து தரப்படும். இது தவிர பயணிகள் ரயில்கள் பற்றிய தகவல் அறிய, சேலம் ரயில் நிலைய நுழைவு வாயில் (சுரங்கப்பாதை இறங்கும் இடத்தின் அருகே) மற்றும் நடைமேடை எண்கள். 3 மற்றும் 4ல் (சுரங்கப்பாதை மேலேறும் இடத்தில்) அமைந்துள்ள இந்த மையங்களின் அருகே தொடுதிரை தகவல் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பயணிகள் வசதி மையங்கள் விரைவில் சேலம் கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில்நிலையங்களுக்கு விரிவு படுத்தப்படும் என்று வர்மா தெரிவித்தார். 



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...