வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் புதிய தொழில்களை துவங்க 5 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய தலா ரூ.15 லட்சம் கடன் உதவியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.
கோவை: கிராமப்புற சமூகங்களின் நிலைத்தன்மை மற்றும் செழிப்பை உருவாக்குவதன் மூலம் கிராமப்புற நிறுவன மேம்பாடு நிதி மற்றும் வேலை வாய்ப்புக்கான மாற்றத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு "வாழ்ந்து காட்டுவோம்" என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், சர்க்கார் சாமக்குளம் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள 54 கிராம ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தை சேர்ந்த 5 பயனாளிகளுக்கு தொழில்களை மேம்படுத்துவதற்காகவும், புதிய தொழில்களை தொடங்கவும் தலா ரூ.15 லட்சம் வங்கி கடன் உதவியை ஆட்சியர் சமீரன் வழங்கினார்.
இதில், ரூ.15 லட்சம் கடன் உதவியில், ரூ.4.50 லட்சம் மானியம் - அதாவது கடன் உதவியில் 30 சதவீதத்தை அரசு மானியமாக வழங்குகிறது. கடனாக வாங்கிய தொகையில் ரூ.10.50 லட்சத்தை பயனாளிகள் திரும்ப செலுத்தினால் மட்டும் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், சர்க்கார் சாமக்குளம் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள 54 கிராம ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தை சேர்ந்த 5 பயனாளிகளுக்கு தொழில்களை மேம்படுத்துவதற்காகவும், புதிய தொழில்களை தொடங்கவும் தலா ரூ.15 லட்சம் வங்கி கடன் உதவியை ஆட்சியர் சமீரன் வழங்கினார்.
இதில், ரூ.15 லட்சம் கடன் உதவியில், ரூ.4.50 லட்சம் மானியம் - அதாவது கடன் உதவியில் 30 சதவீதத்தை அரசு மானியமாக வழங்குகிறது. கடனாக வாங்கிய தொகையில் ரூ.10.50 லட்சத்தை பயனாளிகள் திரும்ப செலுத்தினால் மட்டும் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.