வால்பாறையில் சமீபகாலமாக யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்கள் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கூட பல இடங்களில் முகாமிட்டு தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் ரேசன் கடைகள் ஆகியவற்றை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இதேபோல் நேற்று இரவு வால்பாறையை அடுத்துள்ள புதுத்தோட்டம் பகுதியில் கள அதிகாரி பார்த்திபன் என்பரவது வீட்டை சேதப்படுத்தியது. வீட்டின் கதவு ஜன்னல்களை உடைத்தது. இதனால் அச்சமடைந்த கள அதிகாரி பார்த்திபன் மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் வீட்டின் பின்புறமாக வெளியேற முயற்சி செய்தனர். இதில் கள அதிகாரி பார்த்திபனின் மனைவி மற்றும் அவரது மகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஸ்டேன்மோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதேபோல் நேற்று இரவு வால்பாறையை அடுத்துள்ள புதுத்தோட்டம் பகுதியில் கள அதிகாரி பார்த்திபன் என்பரவது வீட்டை சேதப்படுத்தியது. வீட்டின் கதவு ஜன்னல்களை உடைத்தது. இதனால் அச்சமடைந்த கள அதிகாரி பார்த்திபன் மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் வீட்டின் பின்புறமாக வெளியேற முயற்சி செய்தனர். இதில் கள அதிகாரி பார்த்திபனின் மனைவி மற்றும் அவரது மகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஸ்டேன்மோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

