கோவை தடாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட செங்கல் உற்பத்தியாளர் சங்கத்தினர் - பரபரப்பு..!

செங்கல் சூளை நிலத்தை விற்பனை செய்வதாக தனியார் அமைப்பு ஒன்று, தவறான கருத்துகளை பரப்புவதாக கூறி கோவை தடாகம் காவல் நிலையத்தை செங்கல் உற்பத்தியாளர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், பசுமை தீர்ப்பாயத்தின் தடை உத்தரவால் செங்கல் சூளைகள் தற்போது இயங்குவதில்லை. இந்த நிலையில் செங்கல் சூளைகள் நடத்தி வந்த ஒரு சிலர் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக தங்கள் இடங்களை விற்பனை செய்ய முயன்று வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தனியார் அமைப்பு பெயரில் கடிதம் ஒன்று தடாகத்தை சேர்ந்த ஒரு சிலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் பசுமை தீர்ப்பாயம் வழக்கு நடைபெற்று வருவதால் இந்த இடங்களை யாரும் வாங்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த தகவலை அறிந்த செங்கல் உற்பத்தியாளர் சங்கத்தினர் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அதன் தலைவர் ஜெம் பழனிச்சாமி தலைமையில் தடாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனுவை அளித்துள்ளனர்.

அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தனியார் அமைப்பின் மூலம் வந்த கடிதத்தில் தவறான கருத்துக்கள் மூலம் பொது மக்களை குழப்பம் அடைய செய்து வருகின்றனர்.

அவர்கள் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...