நீலகிரி உதகையில் கார், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணி பலியான சோகம்..!

உதகை - கூடலூர் நெடுஞ்சாலையில் உள்ள தலைகுந்தா பகுதியில் அடர் பனிமூட்டம் காரணமாக காய்கறி ஏற்றி வந்த லாரியும் சுற்றுலா சென்ற காரும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியான நிலையில் மூவர் படுகாயமடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதி.



நீலகிரி: உதகையிலிருந்து கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள தலைக்குந்தா பகுதியில் அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டது.



இந்நிலையில் மலை காய்கறி ஏற்றி வந்த லாரியும், சுற்றுலாப் பயணிகள் சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த கர்நாடகா மாநிலம் கொள்ளேகாளை பகுதியை சேர்ந்த மகாநந்தா(34) என்பவர் உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில், அவரது மனைவி லாவண்யா மற்றும் அவர்களது உறவினர்கள் லிங்கராஜ் மற்றும் ராஜேஷ்வரி ஆகியோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயமடந்த 3 பேரையும் மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



பின்னர், 3 பேரும் மேல் சிகிச்சைகாக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து புதுமந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக மண்டாஸ் புயல் காரணமாக உதகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் மூடுபனி மற்றும் மழை பெய்து வந்ததால், எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக் உள்ளாகி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...