கோவை மாவட்டம் முழுவதும் நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நிலவும் மூடுபனியால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி.
கோவை: கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
இரு தினங்களுக்கு முன்பு மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ஈரோடு, மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
அதன்படி, நள்ளிரவு முதல் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான காந்திபுரம், உக்கடம், சுந்தராபுரம், ஆர்.எஸ்.புரம், மற்றும் சூலூர், பேரூர் என பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதனிடையே பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கடுமையான மூடுபனி இருந்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன.
இந்நிலையில் இன்று பெரும்பாலான பள்ளிகளில் அரை இறுதி தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்கள் மழையில் நனைந்தவாறு பள்ளிகளுக்கு சென்றனர்.