கழிவு பஞ்சு விலை உயர்வால் தமிழகத்தில் 600 மில்கள் உற்பத்தி பாதிப்பு - விலையை குறைக்க தொழில்துறையினர் கோரிக்கை

கழிவு பஞ்சு விலை ஒரு கிலோ ரூ.150ஆக உயர்ந்துள்ளதால் தமிழகத்திலுள்ள 600 ஓபன் எண்ட் மில்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.


கோவை: கழிவு பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் பணிகள் ஓபன் எண்ட்(ஓஇ) மில்களில் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் இதுபோன்ற 600 ஓஇ மில்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பஞ்சு விலை ஒரு கேண்டி (356 கிலோ) ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மறுபுறம் கழிவு பஞ்சின் விலை ஒரு கிலோ ரூ.150ஆக அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள ஓஇ மில்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கத்தின் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறியதாவது, கடந்த ஒரு மாதத்துக்கு மேல் ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு ரூ.70,000 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மறுபுறம் ஸ்பின்னிங் நூற்பாலைகளில் இருந்து பெறப்படும் கழிவு பஞ்சின் விலை ஒரு கிலோ ரூ.125-ல் இருந்து படிப்படியாக அதிகரித்து தற்போது ரூ.150ஆக உயர்ந்துள்ளது. ஸ்பின்னிங் நூற்பாலைகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதை நாங்கள் நன்கு அறிவோம்.

இருப்பினும் விலை உயர்வால்

ஜவுளி சங்கிலி தொடரிலுள்ள ஓபன் எண்ட் மில்கள், விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட பல தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலை நீடித்தால் எதிர்வரும் காலங்களில் ஓஇ மில்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடும்.

ஏற்கெனவே ரூபாய் நோட்டு பயன்பாடுக்கு மாற்றாக டிஜிட்டல் கரன்சி திட்டங்களை அரசு அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், கழிவு பஞ்சு நுகர்வு குறையலாம். ஆனால் எப்போதும் நுகர்வு செய்யும் தன்மை கொண்ட ஓஇ மில்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கழிவுபஞ்சு விலையை குறைக்க ஸ்பின்னிங் நூற்பாலைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறியதாவது, ஆயத்த ஆடைகளுக்கு மட்டும் ஸ்பின்னிங் நூற்பாலைகள் நூலை வழங்குவது இல்லை. விசைத்தறிகளில் பயன்படுத்தப்படும் வார்ப்பு நூலையும் உற்பத்தி செய்து வழங்குகின்றனர்.

கழிவு பஞ்சு விலையை ஒரு கிலோவுக்கு ரூ.30 குறைத்தால் வார்ப்பு நூலின் தேவை அதிகரிக்கும். தவிர ஓபன் எண்ட் மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூலின் விலையும் குறையும்.

இதனால் கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட ஜவுளி சங்கிலித்தொடரிலுள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழலில் இருந்து ஓரளவு மீள வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்..

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...