கோவையில் தைராய்டு அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறால் மூச்சுவிட, பேச சிரமப்படும் பெண் - ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு..!

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தைராய்டு அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறால் 3 ஆண்டுகளாக பேசவும், மூச்சு விடவும் சிரமப்பட்டு வரும் சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த செபியா, உரிய இழப்பீடு கோரி ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு.



கோவை: கோவை மாவட்டம் சவுரிபாளையம் அடுத்த அண்ணா நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி செபியா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் செபியாவிற்கு தைராய்டு பிரச்சினை இருந்து வந்துள்ளது.



இதற்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தைராய்டு பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட தவறால் கடந்த 3 ஆண்டுகளாக பேசவும், மூச்சு விட முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.



இது தொடர்பாக உரிய நடவடிக்கை கோரி, பாதிக்கப்பட்ட செபியா கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 2019ஆம் ஆண்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தைராய்டு பிரச்சனைக்கு இரண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிந்த பின் மூச்சு திணறல் ஏற்பட்டதால், கழுத்துப் பகுதியில் துளையிட்டு தற்காலிகமாக குழாய் அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து வலி ஏற்பட்டதாக கூறியதால், மீண்டும் கழுத்து துளை அடைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு பேச முடியாத நிலை ஏற்பட்டது.

இது குறித்து மருத்துவர்களிடம் கேட்ட போது, அறுவை சிகிச்சையின் போது மூச்சு குழாய் நரம்பில் சிறிய துண்டிப்பு ஏற்பட்டதாகவும், சில நாட்களில் சரியாகும் என தெரிவித்தனர். ஆனால் இப்போது வரை 3 ஆண்டுகள் ஆகியும் பேசவும், மூச்சு விட முடியாமல் தவித்து வருகிறேன்.

இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளதால் பெண் குழந்தைகளுடன் சிரமப்படுவதாகவும், இ.எஸ்.ஐ மருத்துவமனை நிர்வாகம், அல்லது தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்

இவ்வாறு தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...