திருப்பூரில் ‘மீண்டும் மஞ்சப்பை’ உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ செல்வராஜ்

பல்லடம் அடுத்த சித்தம்பலம் ஊராட்சியில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கி வைத்த திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ், இருசக்கர விழிப்புணர்வு வாகனம், சமுதாய நலக்கூடத்தின் பூமி பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை துவக்கி வைத்தார்.



திருப்பூர்: தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த “மீண்டும் மஞ்சப்பை” பயன்பாடு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள சித்தம்பலம் ஊராட்சி மற்றும் தனியார் ரோட்டரி நிர்வாகத்தினர் இணைந்து சித்தம்பலம் ஊராட்சியை பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர்



இந்த நிகழ்வை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மக்களிடம் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துவக்கி வைத்தார்.



அப்போது, பல்லடம் ரெயின்போ ரோட்டரியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார பயணத்தையும் துவக்கி வைத்தார்.



இதையடுத்து சித்தம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளியப்பம் பாளையம் பகுதியில் 38 லட்சம் ரூபாய் மதிப்பில் உணவு அருந்தும் கூடத்துடன் கூடிய சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...