பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இன்ஸ்டா ரீல்ஸ் - பல்லடம் அருகே 2 இளைஞர்கள் கைது..!

பல்லடம் அருகே போக்குவரத்தை மறித்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூரை அடுத்த லட்சுமி நகர் பகுதியிலிருந்து முருகம்பாளையம் செல்லும் பாதையில் உள்ள கிருஷ்ணா பேக்கரி அருகில் நடுரோட்டில் பைக்கை குறுக்கே நிறுத்தி 2 இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்கு ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர்.

பின்னர் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெடிகுண்டு உள்ளது, கோர்ட்டுக்கு நாங்க வந்தா மஜா மஜா என்ற ஆல்பம் பாடலை வைத்து ரீல்ஸ் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.



இந்நிலையில், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலானது. வாகன போக்குவரத்தை நிறுத்தி வாகன ஒட்டிகளுக்கு இடையூறு செய்தது மட்டுமல்லாது பொதுமக்களை அச்சுறுத்தும் படியாக வீடியோ வெளியிட்டது குறித்து பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் வந்துள்ளது.



விசாரணையில் வீடியோவை பதிவு செய்தது முருகன் மில் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மற்றும் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த காளிச்சாமி என்று தெரியவந்தது.



நடுரோட்டில் வாகன போக்குவரத்தை நிறுத்தி வீடியோ எடுத்து போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொது மக்களை அச்சுறுத்தும் படியாக பதிவிட்டதற்காகவும், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், கைதான தமிழ்ச்செல்வன் மற்றும் காளிச்சாமி மீது ஏற்கனவே கொலை முயற்சி, போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...